பக்கம்:இளந்தமிழா.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குயிற் குஞ்சு கறுத்த உடல்வளரக் கண்குளிர நோக்கிப்பின் இனித்த குரல்கேட்டு இப்பெரிய சீற்றமும்ஏன்? நடுங்கியுயிர் போமுன்னே நல்லிசையன் பட்டதுயர் கொடுமூக்காய் எப்படித்தான் கூசாமற் பார்த்தனையோ! தேடி யிரைகொணர்ந்தாய் திக்கனைத்தும் சென்றலைந்தாய் வாடிப் பசித்திருந்தே வந்துணவு தான் தந்தாய் தாயென் றுனைமதித்துத் தண்ணமுத வாயெடுக்கப் பேயைப்போ லானதுமேன் பிணம்விரும்பும் அறிவிலியே? அன்புதனை யல்லால்மற் றறியாத பைங்குழலும் துன்பப் பெருமூக்கால் துளைபட்டுப் போயிற்றே! வசந்தத்தின் தூதுவனை மாஞ்சோலை யின்னிசையைக் கசந்த மனம் கொதித்துக் காக்கை மடித்த தந்தோ! 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/31&oldid=1358747" இலிருந்து மீள்விக்கப்பட்டது