பக்கம்:இளந்தமிழா.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்


கொன்றை அனல் பூத்துக் குயில்வாடுங் கார்காலம்
அன்றி உளம்நைந்து காதலா்தம் பிாிவஞ்சும்
இருளுக் கிருள் போர்த்த இறுதியிலா இரவொன்றில்
கருமை வனா்ந்துவரும் புரவி தனிலேறி
நான்போகும் வேகம் நளனாலும் மாகாதே;
கான்யாறு தான்கடந்து காதலியின் வீடுசென்றேன்;
எல்லோரும் உறங்குகிறார், ஏதும் தடங்கலிலை;
செல்லாமற் சென்றேன், தீங்குழலின் பேச்சுடைய
நங்கை படுத்திருக்கும் நல்லறைக்கு நேராக
அங்கே எனக்காக அவள்காத்து நின்றிருந்தாள்;
கண்டேன் களிதுள்ளக் கட்டித் தழுவிடவே
செண்டாகத் தாவினேன்; கண்துயின்ற கட்டில்விட்டு
மெய்யாக வீழ்ந்தேன்; விழித்திட்டேன்-
ஐயோ, கனவே ஆசையெலாம் பொடித்தாயே!


கொன்றை அனல்பூத்து-கொன்றை கார்காலத்திலே பூக்கிறது; அதன் பூ அனல்போல விளங்குகிறது.

நளனாலுமகாது-வேகமாகக் குதிரையைச் செலுத்துவதில் நான் புகழ் பெற்றவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/44&oldid=1460150" இலிருந்து மீள்விக்கப்பட்டது