இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அதுவா வெகுதொலைவு
"குங்குமப் பொட்டணிந்து
கூடைதலை மேல் வைத்தே
பொங்கும் நகைப் பால்காரி
அங்கலசம் சிறிதசைய
எங்கே நீ செல்லுகின்றாய்
எனக்கறியக் கூறாயோ?"
'அதுவா வெகுதொலைவு
இதுநாளும் போயறியேன்."
வார்த்தை மிகப்பொழிந்து
மன்பதையின் மனங்குழப்பிக்
கீர்த்திமலை ஏறி நிற்கும்
கீழ்மேல்நாட் டரசியலின்
மூர்த்திகளே நீர்நவிலும்
மோகனநா டெதுசொல்வீர்.”
"அதுவா எதுவென்றே
அறிவதற்கு நேரமெங்கே?"
"அண்டமுக டதன் மேலும்
அணுக்கருவின் உள்ளேயும்
கண்டறிந்த சேதிகளைக்
காட்டிவரும் விஞ்ஞானீ
44