பக்கம்:இளந்தமிழா.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அதுவா வெகுதொலைவு

கானுறையும் முனியேநீ
காணவிழை நாடெதுவோ?"
"அதுவா வெகுதொலைவு
நிதந்தேடி யலைகின்றேன்.”

"அந்தமிலா தண்டங்கள்
ஆக்கியழித் தமையாதாய்
எந்தநல்ல திருவுலகை
எண்ணகத்தே கொண்டுள்ளாய்
முந்துமறைத் தனிமுதலே
மொழிந்தருள்க நானறிய"
"அதுவா இதுகாறும்
ஆகவில்லை என் படைப்பில்."





46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/48&oldid=1460153" இலிருந்து மீள்விக்கப்பட்டது