பக்கம்:இளந்தமிழா.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொங்கல்

யாதும் ஊரெனச் சாற்றியதும்-மக்கள்
யாவரும் கேளிர் என்றதுவும்
மேதினிக் குரைத்தவர் நம்முன்னோர் -இன்று
வேற்றுமை நாமெண்ணல் சரியாமோ?


பொங்கல் திருநாள் வந்ததுபார்-இனிப்
புன்மையும் பகையும் போயொழிக
பொங்குக மங்களம் உலகெல்லாம்-எங்கும்
தங்குக அன்பும் அமைதியுமே.

52

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/54&oldid=1460160" இலிருந்து மீள்விக்கப்பட்டது