இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொங்கல்
யாதும் ஊரெனச் சாற்றியதும்-மக்கள்
யாவரும் கேளிர் என்றதுவும்
மேதினிக் குரைத்தவர் நம்முன்னோர் -இன்று
வேற்றுமை நாமெண்ணல் சரியாமோ?
பொங்கல் திருநாள் வந்ததுபார்-இனிப்
புன்மையும் பகையும் போயொழிக
பொங்குக மங்களம் உலகெல்லாம்-எங்கும்
தங்குக அன்பும் அமைதியுமே.
52
52