பக்கம்:இளந்தமிழா.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சத்தியம்

இத்தரணி யென்னாளும்

  ஈடேறி உய்யாதோ? 

சத்தியந்தான் வெல்லாதோ

  தருமநெறி ஓங்காதோ? 

என்று மனம் சோர்ந்தேன்

  இருள்கூடி நெஞ்சுடைந்தேன்

அந்தப் பொழுதினிலே

  அகக் கண்ணின் முன்பாக உன்னதமாம் குறிக்கோளுக்
  குயிரீந்த மேலோரின் 

மன்னுபுகழ் வடிவெல்லாம்

  வந்தனவே ஒளிமயமாய்; எல்லார்க்கும் நடுநிலையாய்
  இயேசுமுனி அன்புருவம் 

கல்லும் கரைந்துருகும்

  கருணை ஒளி 
     கண்குளிர்ந்தேன்; 

அன்பென்று பேசி வந்த

  அவர் நெஞ்சில் ஆணியிட்டுத் துன்மதியோர் உடல்வதைத்தார்
  தூயமகான் மறைந்தாரோ 

ஏசுமுனி மாய்ந்தாரோ

  இல்லை யில்லை நாமறிவோம் வீசுபுகழ் பொங்கியெழ
  மேதினியில் ஓங்கிநின்றார் புத்தனுக்குத் தம்பியவர்
  பொன்னடியைப் பின்பற்றி 

மெத்தக் கருணையினால்

  மீண்டும் வந்த தம்பியிவர்
         61
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/63&oldid=1359771" இலிருந்து மீள்விக்கப்பட்டது