பக்கம்:இளந்தமிழா.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்க காந்தி

தக்கதோர் நெறியை அன்பால்
சமயத்திற் குகந்தவாறு
மக்க ளுக் களிக்கவந்த
மகாத்மா நீ வாழ்க வாழ்க!

வெறுப்பினை அன்பால் வெல்லும்
விதந்தனை வகுத்தாய் உள்ளச்
செருக்கினை அடக்கந் தன்னால்
திருத்திடும் வாழ்வு கொண்டாய்
நெருப்பினைக் கக்கும் வெஞ்சொல்
நேரலார் பகைமை யெல்லாம்
சிரிப்பினால் மறையச் செய்யும்
திறனுடை காந்தி! வாழ்க!

அறிவினைப் பெற்று மாந்தர்
அறவினை துறந்திந்நாளில்
மறவினை எண்ணி வையம்
மாய்ந்திடப் படைகள் கண்டார்
வெறியினைப்போக்கி மேலாம்
மெய்ந்நெறி காட்ட வந்த
பொறைதயை அஹிம்சை அன்பாம்
பொன்மொழிக் காந்தி! வாழ்க!

கிரிஷ்ணன் கையில் சுழன்ற சக்கரம் அன்று சமர் செய்ய ஒலித்தது; இன்று காந்தி மகான் கையில் சுற்றுகிற ராட்டைச் இக்கரம் சாந்தியின் கீதம் பாடுகிறது.


66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/68&oldid=1460164" இலிருந்து மீள்விக்கப்பட்டது