பக்கம்:இளந்தமிழா.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்லடா!

           பல்லவி

செல்லடா செல்லடா! முன்னெழுந்து மேலும் மேலும் செல்லடா! செல்லடா!

           சரணம்

முன்வைத்த காலைப் பின்வைக்க லாகுமோ? உன்னத வாழ்வெலாம் உச்சியிலுள்ளது-செல்லடா! உச்சியென் றாலும் உள்ளம் மலைக்காதே கச்சை வரிந்தே கட்டிப் புறப்பட்டுச்-செல்லடா! சுடர் ஒளி போலவே தொலைவினில் காணுது படர் ஒளிக் கதிர் வீசிப் பார்புகழ் மணிமுடி-செல்லடா தாய்சிறப் பெய்தவே சாவை எதிர்த்துநீ பாய்புலி நாணிடப் பார்வை மிடுக்குடன்-செல்லடா!

             77
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/79&oldid=1359128" இலிருந்து மீள்விக்கப்பட்டது