இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
செல்லடா!
பல்லவி
செல்லடா செல்லடா! முன்னெழுந்து மேலும் மேலும் செல்லடா! செல்லடா!
சரணம்
முன்வைத்த காலைப் பின்வைக்க லாகுமோ? உன்னத வாழ்வெலாம் உச்சியிலுள்ளது-செல்லடா! உச்சியென் றாலும் உள்ளம் மலைக்காதே கச்சை வரிந்தே கட்டிப் புறப்பட்டுச்-செல்லடா! சுடர் ஒளி போலவே தொலைவினில் காணுது படர் ஒளிக் கதிர் வீசிப் பார்புகழ் மணிமுடி-செல்லடா தாய்சிறப் பெய்தவே சாவை எதிர்த்துநீ பாய்புலி நாணிடப் பார்வை மிடுக்குடன்-செல்லடா!
77