பக்கம்:இளந்தமிழா.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைவு அலைகள் நெஞ்சிலே ஆயிரம் ஆயிரம் கிளர்ச்சிகள், எண்ணங்கள், ஆசைகள் எழுந்து ஓயாமல் அலை மோதுகின்றன. ஆனால் இருபதாம் வயதிலே, இளமையிலேயே போக்கே வேறு ;ஐம்பதாம் வயதிலே முதுமை எய்துகின்ற காலத்திலே அவற்றின் போக்கே வேறு. எல்லோருக்கும் அல்ல-பெரும் பாலோருக்கு.

இருபதில்:

மண்ணிலே உயர் தேவநல் லின்பத்தை

வளரச் செய்துநான் யார்க்கும் வழங்குவேன்! 

விண்ணிலே அந்தத் தாரகைக் கூட்டத்தில்

 வீடமைத்துப் புதுஉல காக்குவேன்; 

கண்ணிலே ஒளி காட்டும் அழகியர்

 காதல் என்றிடில் சாதலுக் கஞ்சிடேன்; 

தண்ணென் மாமதி தன்னைப் பிழிந்துமே

 சாறெடுத்துமின் தங்கமும் பண்ணுவேன். 

மாந்தர் யாவரும் ஒர்நிலை தன்னிலே

 வாழும் இன்பச் சமூகத்தை நாட்டுவேன்; 

சாந்தி அன்பறம் எங்கும் தழைத்திடத்

 தளர்விலா துழைத் தேவெற்றி கூட்டுவேன்; 

கூந்தல் நீண்ட இளங்கொடி மேனியர்

 கூறிடிற்கட லேழும் சுருட்டுவேன்; 

காந்த மின்பொறி ஞான மனைத்தையும்

 கண்டுழைப்புச் சலிப்பை வெருட்டுவேன்.
             81

இ.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/83&oldid=1359511" இலிருந்து மீள்விக்கப்பட்டது