இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நினைவு அலைகள் நெஞ்சிலே ஆயிரம் ஆயிரம் கிளர்ச்சிகள், எண்ணங்கள், ஆசைகள் எழுந்து ஓயாமல் அலை மோதுகின்றன. ஆனால் இருபதாம் வயதிலே, இளமையிலேயே போக்கே வேறு ;ஐம்பதாம் வயதிலே முதுமை எய்துகின்ற காலத்திலே அவற்றின் போக்கே வேறு. எல்லோருக்கும் அல்ல-பெரும் பாலோருக்கு.
இருபதில்:
மண்ணிலே உயர் தேவநல் லின்பத்தை
வளரச் செய்துநான் யார்க்கும் வழங்குவேன்!
விண்ணிலே அந்தத் தாரகைக் கூட்டத்தில்
வீடமைத்துப் புதுஉல காக்குவேன்;
கண்ணிலே ஒளி காட்டும் அழகியர்
காதல் என்றிடில் சாதலுக் கஞ்சிடேன்;
தண்ணென் மாமதி தன்னைப் பிழிந்துமே
சாறெடுத்துமின் தங்கமும் பண்ணுவேன்.
மாந்தர் யாவரும் ஒர்நிலை தன்னிலே
வாழும் இன்பச் சமூகத்தை நாட்டுவேன்;
சாந்தி அன்பறம் எங்கும் தழைத்திடத்
தளர்விலா துழைத் தேவெற்றி கூட்டுவேன்;
கூந்தல் நீண்ட இளங்கொடி மேனியர்
கூறிடிற்கட லேழும் சுருட்டுவேன்;
காந்த மின்பொறி ஞான மனைத்தையும்
கண்டுழைப்புச் சலிப்பை வெருட்டுவேன். 81
இ.-6