பக்கம்:இளந்தமிழா.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 நினைவு அலைகள்

ஆண்டு நூறுக்கு மேலிங்கு யாவரும்

 அமரவாழ்வு பெறவழி காணுவேன்; 

யாண்டும் பூவும் பொலிவும் கலைகளும்

 ஈண்டி ஓங்கும் பலபணி பூணுவேன்; 

மூண்டகாதல் மடந்தை முறுவலில்

 மோதும் உள்ளக் கருத்தும் முடிப்பன்யான்! 

நீண்ட நல்லின்ப வீடிது தானென

 நீள் நிலத்தையும் மாற்றி அமைப்பனே.

ஐம்பதில்

மண்ணிலே யெனக் குள்ளதெண் காணியே,

மற்றோர் காணி பிடித்திடச் சூழுவேன்; 

வெண்ணெய் போலொளிர் சுண்ணநற் சாந்தினால்

 வீடுகட்டி நான் சொந்தமாய் வாழுவேன்; 

பெண்ணிலே யொரு பேதையைக் கொள்வதால்

 பிறவி நோய்தனைப் பெற்றதைத் தேர்ந்துளேன் பண்ணும் ஊழியர் தம்மைப் பிழிந்துமே
 பங்கயத் திருச் சேர்க்கவே நாடுவேன்.

மாந்தர் யாவரும் ஒர்நிலை யென்னுமோர்

 மாற்றம்பொய்க் கதையெனக் கண்டுளேன்; 

காந்தி கொண்டபொற் காசுகள் ஈட்டலே கருதுவேன் இனிக் கனவுகள் கண்டிடேன்; கூந்தலுக் கொரு வாசநெய் வேண்டுவார்

கூறைச்சோலை நகையெனக் கூவுவார் 

சாந்தியோ டிங்கு வாழவிடு வரோ?

சற்றுமில்லை நான் முற்று மறிந்தனன்.


            82
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/84&oldid=1359520" இலிருந்து மீள்விக்கப்பட்டது