பக்கம்:இளந்தமிழா.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மானிடா எழுக

1

மாண்பு மிக்குடைய மானிடா எழுக!
வையகந் தன்னை வானக மாக்குக!
புன்மையும் சூதும் பொய்ம்மையும் செய்து
உன்பே ரினமே ஒழிந்திடப் புரியேல்.

2



இறைவன் படைப்பினில் இந்தநல் லுலகம்
ஒருபிடி மண்ணதில் ஒரணு நீதான்!
ஆயினும் உலகோ டகிலாண் டங்களும்
சாயவும் துளங்கவும் தழைத்து மேலோங்கவும்
வலியுடை எண்ணம் மனத்தினிற் கொள்ளும்
அலகிலா ஆண்மையோ டமைந்தவன் நீயே;
மாண்பு மிக்குடைய மானிடா எழுக.
வையகந் தன்னை வானக மாக்குக.

3



இறைவன் நினைக்குமுன் எழுந்திடும் உயிர்களில்
சிறுபுழு முதலாச் செறிந்தவை நாடில்
எண்ணிறந் தவையாம்; இவைகளுள் ஒருவன் நீ;
என்னினும் வரிப்புலி இடிக்குரற் சீயம்

87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/89&oldid=1359486" இலிருந்து மீள்விக்கப்பட்டது