இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மானிடா எழுக
மதம்படு கரியெலாம் வணங்கிட அடக்கும்
முதற்படுத் திறமையில் முதிர்ந்தவன் நீயே.
மாண்பு மிக்குடைய மானிடா எழுக
வையகந் தன்னை வானக மாக்குக.
4
ஞாலமீ துன்றன் நனிசிறு வாழ்க்கையும்
காலவெள் ளத்தினிற் கண்டதோர் திவலையாம்;
உண்மையிஃ தாயினும் ஒதுமக் காலமும்
வண்மையாற் கடந்து வாழ்ந்திடும் செயல்கள்
விண்ணுளோர் கண்டு வியப்புறும் படியாய்ப்
பண்ணிடும் அருந்திறல் படைத்தவன் நீயே;
மாண்பு மிக்குடைய மானிடா எழுக
வையகந் தன்னை வானக மாக்குக.
5
அழிந்துபோ யொருநாள் அனலிடை மூழ்கி
ஒழிந்திடும் யாக்கையை உடையவன் ஆயினும்
செயற்கரும் பணியால் தீஞ்சுவைக் கலைகளால்
உயிற்குளே நின்றிடும் ஒருவனை அறிவதால்
என்றும் புவிதனில் இருந்திடும் சிறப்பினை
நன்றுநீ கொண்டனை; நலமெலாம் பெருகவே
மாண்பு மிக்குடைய மானிடா எழுக
வையகம் இன்றே வானக மாக்குக
88