பக்கம்:இளந்தமிழா.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நீல மலர்க்கண்

நீல மலர்க்கண் ணிரண்டு--என்றன்
    நெஞ்சை மயக்கிடும் வண்டு
மாலை இருளென வளரும்--அவள்தன்
    மைக்குழ லில் உளம் தளரும்


சன்னக் குழிமதுத் தேக்கும்--அதுவென்
    காதலே மீறியுண் டாக்கும்
மின்னைப்போல் தோன்றும் சிரிப்பு--கொஞ்சம்
    வேறுபட் டாலெங்கும் நெருப்பு


கொஞ்சும் மொழிகுயி லோசை--அதிலே
    குமிழியிட் டோங்குமென் னாசை
கஞ்ச மலர்முகைக் கொங்கை--ஏந்துங்
    கவின் நிறை வாளந்த மங்கை


அமுதுடன் வந்தசெய் யாளோ--என்மேல்
    அன்பு சிறிதும்செய் யாளோ
எமனுக்கு நானின்று தத்தம்--மீட்கவே
    எண்ணிடு மோஅவள் சித்தம்?


90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/92&oldid=1359516" இலிருந்து மீள்விக்கப்பட்டது