பக்கம்:இளந்தமிழா.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கைப் பயணம்

ஓடக்காரா
என்னை நீ எங்கு தள்ளிச் செல்லுகின்ரறாய்?
கொந்தளித்துக் குமுறும் வெள்ளத்தில் அலையவைத்தாய்
பாறைகளில் மோதி வேடிக்கை பார்த்தாய்.
சேற்றிலே புதைந்து அலமரச் செய்தாய்.
பயணம் தொடங்கியது முதல் ஒரே கவலை; ஒரே கலக்கம்.
இன்பமென்று கண்டதெல்லாம் கனவாகிவிட்டதே!
சிறிதாவது அமைதி உண்டா?
ஓய்வுண்டா?

ஓடக்காரா, உனக்கு இரக்கமில்லையா?
மோதி அடிபட்டு ஓடமும் கலகலத்துப் போய் விட்டதே?
அந்திப் பொழுதும் நெருங்கிவிட்டதே?
இனியாவது அமைதியான நீரில் செல்லலாகாதா?
இப் பயணம் எப்பொழுதுதான் முடியுமோ?
உறங்கிக் கிடந்தும், விழித்துச் செல்வதுமாய்
எத்தனை காலந்தான் கழியுமோ?
எத்தனை உடைகள் மாற்றி மாற்றி அணிவதோ?
ஓடக்காரா
இன்னும் கருணை பிறக்கவில்லையா?
என்னைக் குறியிடம் கொண்டு சேர்க்கமாட்டாயா?
நான் உன்னைக் கெஞ்சுகின்றேனே?

95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/97&oldid=1360683" இலிருந்து மீள்விக்கப்பட்டது