பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

உயர்நிலைப்பள்ளி நூலகம்


இருக்குமானல், பள்ளியின் நூலகத்தல்வர் அந்தப் பொது நூலகத்தல்வரோடு உறவு கொள்வது முக்கியம். அதனல், பொதுநூலகத்திலிருந்து எளிதில் மாணவர்க்கும் மக்களுக்கும் கிடைக்கும் நூல்களப் பள்ளிநூலகத்தில் வாங்கி வைத்தல் தேவையற்றதாகும். ஆகையால், ஓரளவுக்கு மிஞ்சும் பணத்தைப் பருவமலர்களை வாங்கப்பயன்படுத்தலாம்.

நூலகத்தலைவர் ஒதுக்கப்பட்ட மானியம் ஆண்டிற்குள் நல்ல முறையில் முழுவதும் செலவழிக்கப்பட்டதா என்பதைக் கவனிக்க வேண்டும். சிறு தொகை எஞ்சுமாயின் தவறென்றுமில்லை. குறிப்பிட்ட தொகை எஞ்சிவிடுமானல், மறு ஆண்டு மானியம் குறைக்கப்பட்டுவிடும். அத்தகைய குறைக்கு நூலகத்தல்வர் இடமேற்படாது பார்த்தாலொழிய நூலகம் வளராது.