42
உயர்நிலைப்பள்ளி நூலகம்
ஒன்று உண்டு. அது பாட நூலகும். எனவே நூலகத்தலைவர் பொதுவாகப் படிக்கும் நூல்களோடு வெவ்வேறு சுவை வழங்கும் நூல்களையும் வாங்கி வைத்தல் வேண்டும்.
ஒரு வகுப்பிலே ஆடவரும் பெண்டிரும் சேர்ந்து படிக்கிருர்கள். ஆடவர் சுவை வேறு; பெண்டிர் சுவை வேறு; ஒரே பாடத்திலேகூட ஆடவர் ஒரு பகுதியை விரும்பிப் படிப்பர்; பெண்டிர் வேருெரு பகுதியை விரும்பிப் படிப்பர். எடுத்துக் காட்டாகத் தமிழ்ப் பாடத்தைப் பார்ப்போம். ஆடவர்கள் தமிழிலக்கியப் பகுதியை விரும்பிப் படிப்பின், பெண்டிர் இலக்கணப் பகுதியை விரும்பிப் படிக்கலாம். அதனால் நூலகத் தலைவர் இலக்கிய நூல்களை மட்டும் வாங்கி வைத்தல் கூடாது; இலக்கண நூல்களையும் வாங்கி வைக்க வேண்டும். இவ்வாறு மாணவர்தம் சுவைக்கேற்ற வெவ்வேறு நூல்களை வாங்கி வைக்க வேண்டுமானல் நூலகத்தலவர் தனிப்பட்ட மாணவரோடு நெருங்கிப் பழகியிருக்கவேண்டும். ஆணுயினும் சரி, பெண்ணுயினும் சரி; எந்த மாணவராவது, நூலகத்தலைவர் வேண்தேல் வேண்டாமையுடையவர்; அதனுல்தான் தமது சுவைக்கேற்ற நூல்களே வாங்காமல் புறக்கணிக்கிருர் என்று அறிந்துவிட்டால் அதுவே கல்விக்குச் சாபக்கேடாக முடியும்; அறிவு வளர்ச்சிக்கு இடையூருகவும் தோன்றும்; ஏனெனில் அதல்ை மாணவர்தம் தனிப்பட வளரும் அறிவு ஒடுங்கிப்போவதுடன், அவர்கள் நூலகத்துக்கு அதிகமாக வருவதும் தடைப்பட்டுவிடும்.
அதனால் நூலகத் தலைவர் தனிப்பட்ட மாணவர்களின் மனப்பாங்கு, அறிவு நிலே, அவர்கள் விரும்பிப் படிக்கும் நூல்கள் ஆகியவற்றை . நன்கறிந்து அதற்கேற்ற நூல்களையும் பருவ மலர்களையும் 'வாங்கி வைத்தல் வேண்டும். இந்த இடத்தில் “பார்கோ' என்பவரது கருத்துக்களை நினைவிற் கொள்ளல் இன்றியமையாததாகும்.