பக்கம்:உரிமைப் பெண்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

உரிமைப் பெண்

 வள்ளியாத்தாள் இப்படிக் கவலை இல்லாமல் பேசுவாளென்று வீரப்பன் எதிர்பார்க்கவே இல்லை. அவள் வருத்தப்பட்டுப் புலம்புவாளே என்றுதான் அவன் பெரிதும் பதைத்துக் கொண்டிருந்தான். அவளுக்குச் செய்ய வேண்டிய கடமையை விரைவில் செய்ய இயலாமற் போய்விட்டதே என்றுகூட அவன் கலங்கவில்லை.

ஆனால் வள்ளியாத்தாளின் செய்கை அவனுக்கு மலைப்பை உண்டாக்கிவிட்டது. உயிருக்குயிராக வளர்த்த கடாரியைப் புலி அடித்துவிட்டது என்று கேள்விப்பட்ட பிறகும், விற்பதற்கே உடன்படாது அழுதவள் இவ்வாறு குதுாகலமாகப் பேசுவது அவனுக்கு விளங்கவே இல்லை. அவன் திகைத்துப்போய்ச் சிலைபோல் உட்கார்த்திருந்தான். பாவாத்தாள் சாப்பிட அழைத்ததும் அவன் செவியில் நுழையவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/29&oldid=1137142" இலிருந்து மீள்விக்கப்பட்டது