பக்கம்:ஊசிகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



புரோகிதரே போதும்




“வந்து திரும்ப
வழிச்செல வுத்தொகை
இருநூற் றைம்பது
ஏ.சி வசதி
இருக்கும் விடுதி
சுண்டக் காய்ச்சிய
பசும்பால் முந்திரிப்
பருப்பு முடிந்தால்
முயல்கறி மான்கறி
முக்கியம் பிரியாணி’’



கடிதக் குறிப்பைக்
கண்டதும் ஆசையாய்
புதுமைத் திருமணம்
புரியக் கருதிய
தனபா லனுக்குத்
தலைசுற் றியது;
அவனையும் மீறி
வாய் கத்தியது:



“அம்மா சொன்ன
ஐயரே போதும்.”

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/41&oldid=1013574" இலிருந்து மீள்விக்கப்பட்டது