பக்கம்:ஊசிகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நீ அப்பா!



சிறுமலைப் பழம்ஒரு சீப்பும்
பலாப்பழச்சுளைகள்
பத்துப்பன்னிரண்டும்
சிவந்த ஆப்பிள் ஐந்தாறும்
தின்றபின்
மாம்பழம் இங்கே
வரத்தில்லையே
என்று கேட்டவாறு
இருமிக் கனைத்துப்
பாகவதர்கனிந்து
பாடத் தொடங்கினார்:
“பழம்நீஅப்பாபழம்நீ...”

அப்பன் முருகன்
அலறி ஓடினான்.

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/44&oldid=1013577" இலிருந்து மீள்விக்கப்பட்டது