பக்கம்:ஊசிகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவி



"இறந்த பின்னால்
என்னைப் பற்றி
எழுத வேண்டும்
இயலுமா உம்மால்?"

'இந்த வினாடியே
எழுதத் தயார்நான்......

சத்திரம் வைத்தார்
சாவடி அமைத்தார்
மரங்கள் நட்டார்
தண்ணீர் போட்டார்...
தப்பு ஊற்றினார்'

'அடடா போதும்
அண்டப் புளுகரே!
இனிமேல் நீரே
எனது பரம்பரைச்
சரித்திரப் பண்டிதன்
சம்மதம்தானே?"

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/59&oldid=1013594" இலிருந்து மீள்விக்கப்பட்டது