இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தலை குனிவு?
❖
பாரதச் செல்வனும்
அந்நியச் சிறுவனும்
தத்தம்
தேசப் பெருமை
பேசலானார்......
"எங்கள் நாட்டில்
நாய்கள் பற்பல
குட்டிகள் போடும்...... ”
"எங்கள் நாட்டில்
மட்டும் என்னவாம்?"
"எங்கள் நாட்டில்
பன்றிகள் பற்பல
குட்டிகள் போடும்...... ”
"ஆச்சர்யம் இதில்
என்னவாம்......
அங்கும் அப்படியே!”
60