இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உயர்ந்த பள்ளம்!
❖
எங்கள் ஊருக்கு
எதிரிலோர் பள்ளம்...
இன்று நேற்றா
இருபது வருடமாய்
நின்று கொண்டிருக்கும்
நெடிய பள்ளம்
எங்கள்
ஊரின் பெயரோ
உறங்கான் பட்டி
உச்சரிப்பதுவோ
உரங்கான் பட்டி
மாட்டு வண்டிகள்
மட்டு மல்லாமல்
கனதனவான்களின்
கார்களும் கூடப்
பாதையில் இருக்கும்
பளளம் வநததும்
பணிவாய்ப் போகும்;
பாம்பாய் ஊரும்!
80