ருஎ
அருளிய ஆணையை ஐயுறல் வேண்டா
கந்தன் நமக்கருள் கட்டளை பொய்க்குமா?
இந்தப் பணியில் இன்னுமேன் தாழ்வு?
தொடுகுழி அமைத்தல் தொண்டர் நமக்கே
இடுபணி யாகும் ஆதலின் ஐய,
ஊரார் அரவம் ஒடுங்கிய பின்னர்
ஈராறு கையன் இட்ட பணியை
இன்றிராப் பொழுதே இருவருந் தொடங்குதும்’
என்றனர் புலவர்; இரங்கிய குரலில்
வந்தவர் திருவாய் மலர்ந்தனர் ‘செய்யலாம்
தொடுகுழி யதனுட் படுபொருள் ஒருகால்
அடைதல் இயலா தாகினென் செய்வோம்!’
என்னுமோர் ஐயம் எழுப்பலும் ஆஆ!’
இன்ன வகையில் எண்ணுதல் தகுமா?
நெடுந்தொலை விருந்திவ் விடந்தனில் வரஉமைக்
கடம்பன் அருளினன் இருவர் கனவிலும்
மயில்மிசை ஏறி மனைவி மாரொடும்
அயில்வேல் முருகன் காட்சி யருளினன்;
பொன்னின் புதையல் பொருந்தும் இடமும்
சொன்னவன் அவனே, சொலும்அம் மொழியில்
ஐயம் உறுதல் அடாத பாதகம்;
ஐய நும்போல் அறியாத் தனத்தால்
மெய்யன் மொழியில் ஐயம் உற்றுநான்
ஆண்டவா முருகா அக்குழி யதனைத்
தோண்டிய பின்னர்ச் சொலும்பொன் இலையேல்
யாமென் செய்குவோம்?’ என்று வினவ,
‘பூமென் முகத்திற் புன்னகை அரும்பி,
ஆறு முகத்தன் சிறுத வின்றித்