பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முதுபெரும்புலவர் செம்மல் அறிஞர்

வ, சுப. மாணிக்கம் பாடிய
சிறப்புப் பாயிரம்

தெய்வ வாழ்க்கையன் தெளிந்த இல்லறன்
எதிரதை உணர்ந்தோன் எண்ணம் பெரியோன்
குற்றம் பாராக் குணத்தின் கொள்ளிடம்
அற்ற குளத்துள் ஐவரை வளர்த்துச்
சுற்றம் புரந்த தொழுதகை அய்யா
அன்பின் திருவுரு அண்ணா மலையான் ; 6

பெற்ற ஒரு மகன் பெறலரும் அம்மான்
நாட்கடன் வழுவா நன்னெறி யாளன்
தந்தை பணிகளைத் தலைமேற் கொண்டோன்
ஊர்ச்சபைக் கட்டிட உயர்நிலைக் கீந்தோன்
தப்பிதம் அறியாச் சுப்பிர மணியன் ; 11

தவத்தாற் பெற்ற தமிழ்ப்பணி இளைஞன்
காலத் தொண்டும் கடமை நோக்கும்
சாலத் தெளிந்தோன் தனித்திறம் மிக்கோன்
அருமை மைத்துனன் அண்ணா மலையான்
மதிப்பு க் கொடையாற் பதிப்புமெய் பெற்றனன்
ஊன்றுகோல் தாங்கிய ஒருநடைக் கிழவன்
மண்டிய இருமொழி வளமார் புலவன் .
பண்டித மணியன் பற்றுமென் ஆசான்; 19

ஆசான் பொழிவும் ஆக்க நூல்களும்
தமிழைப் பழிக்கும் தம்பிடி மாக்கள்
தாய்மொழி கல்லாத் தறுதலைக் குழவிகள்