பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடெடுத்த பயன்முழுதுந் துய்த்த நூலோர்;
      குழந்தைமுதல் பெரியர்வரை அறியும் மேலோர்,
கேடுடுத்த கடல்கோளாம் கறையான் வாயும்
      கெடுமதியர் சூழ்ச்சிகளும் தப்பி நின்று
ஏடெத்து நமதுதமிழ் நூல்கள் வாழ
      இனிதனித்தோர் பணிபுரிந்தோர் சாமிநாதப்
பீடுடத்த பெருங்கிழவர்; அவர்தம் நட்பும்
      பெரும்புலமைக் கிழவரிவர் பூண்டிருந்தார்.


10.பேராசிரியக் காதை


மடைகாட்டும் வெள்ளமென வந்த செல்வம்
      மற்றெதற்கோ செலவழித்துப் பயின்ற நாட்டில்
நடைகாட்டுங் கல்விதரக் கழகம் காண
      நற்றமிழ்க்குக் கோவில்செய முந்தி முந்தி
நடைபோட்டு வந்தமகன் அரசர் என்று
      நாடெல்லாம் போற்றுமகன் எதையும் தூக்கி
எடைபோட்டுப் பார்ப்பதிலே வல்ல மைந்தன்

      எழில்மிகுமண் ணாமலையார் போல்வார் யாரே?
1

காடாய வேட்களத்தைக் கல்லும் முள்ளும்
      கலந்திருந்த நிலப்பரப்பைச் சீர்தி ருத்தி
நாடாக உருவாக்கித் தம்பேர் தாங்கும்
      நகராக்கிப் பல்கலைதேர் கழக மாக்கி
ஏடாள வல்லார்யார் என்று தேடி
      இணையிலரைத் துறைதோறும் ஆசா னாக்கிப்
பீடாள வந்தவரைத் தமிழர் கண்ட

      பெருநிதியை என்சொல்லி வாழ்த்து வோமே.
2