பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௯௪

ஊன்றுகோல்

இலக்கணத்தை உலைக்களமென் றிரும்பு லக்கை
என்றெல்லாம் எள்ளிநகை செய்வா ருண்டு;
விலைக்கரும்பைப் பிழிந்தெடுக்கும் ஆலை என்றும்
விளையாட்டு மொழிபேசும் சிலரும் உள்ளார்
உளக்கருத்தைச் சொலுமுரிமை எவர்க்கும்
உண்டால்
ஒரளவே தெரிந்தவர்தாம் உளற லாமோ ?
நிலைக்கிரங்கி நிற்பதலால் வேறென் செய்வோம்?
நிகழ்காலம் இகழ்காலம் ஆயிற் றந்தோ ! 9

இவரிடத்துக் கற்றவர்தாம் இலக்க ணத்தை
எள்ளிநகை செய்ததையாங் கண்ட தில்லை;
எவரிடத்துக் கேட்டாலும் வியந்து நின்றே
ஏற்றமுற மொழிவதைத்தான் கேட்ட துண்டு:
தவறிழைக்கத் துணிவாரோ தமிழை ஆய்ந்தார்?
தமிழிவர்பாற் பயில்கின்ற பேறு பெற்றோர்
உவகைக்கோர் எல்லையில்லை; அரிய ஒன்றிங்
குற்றதுபோல் அவருளத்தில் நிறைவு காண்டார். 10

மாணவன்போல் ஆசான்றன் திறத்தை யெல்லாம்
அளந்தறிய வல்லவொரு கருவி இல்லை
காணுமிவர் ஆற்றலுக்குச் சான்று காட்டக்
கற்றவர்தாம் தருமொழியில் ஒன்று போதும்;
பேணிஅவர் தருமொழிகள், பாடஞ் சொல்லும்
பெருமையினை நன்கெடுத்து விளக்கிக் காட்டும்;
பூணுமுயர் அன்புணர்த்தும்; அவர்தம் வாழ்வு
பொலிவுபெற வழியுரைத்த அழகுங் காட்டும். 11


*. மாணவர் (இவரிடம் கற்றவர்)