பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11. பொதுப்பணிபுரி காதை


இயலுண்டாம் இசையுண்டாம் கூத்தும் உண்டாம்
இனியதமிழ் மொழியிடத்தே என்பர் மேலோர்
மயலுண்ட அறிவுடையார் கூடி யிங்கு
மறுப்புரைத்தார் இசையில்லை தமிழில் என்றே;
அயல்மொழிக்கே உரியவராய் அம்மொ ழிக்கே
அடிமைகளாய் இருப்பவர்தம் கூற்றே யாகும்;
செயல்மறந்து தமிழ்மாந்தர் உறங்கும் போது

திருடவரும் கயவருக்கு வேட்டை தானே.
1


தோற்கருவி துளைக்கருவி நரம்பு கட்டித்
தொடுகருவி வெண்கலத்துக் கருவி என்று
நாற்கருவி கண்டவர்நாம்; பாடு தற்கு
நன்மிடறும் ஒருகருவி யாகும் என்றோம்:
ஏற்கமதி யிலராகி வஞ்ச நெஞ்சர்
இசையிலையே தமிழ்மொழியில் என்று சொன்னார்;
வேற்கருவி எடுத்தெம்மைச் சாய்ப்ப தற்கு

விலாவிடையே பாய்ச்சுதல்போற் கேட்ட தம்மா.
2