பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்


வாங்கும் உயிர்ப்புத் தேங்கி வந்தது;
தேங்கும் உயிர்ப்புத் திணறல் காண்டலும் 20
பாயல் விரித்துப் படுத்தனர் தரையில்
விரித்த பாயலிற் படுத்தவர் விழித்திலர் ;
விரித்துரை நல்குவோர் விரித்திலர் ஒருசொல்;
உதடுகள் எதையோ ஒதி யசைந்தன
அசைந்தன தாமும் அசைவற் றோய்ந்தன ; 25
கதிரவன் இன்பக் கடலுள் மூழ்கினன்
அதன்பின் யாண்டும் அழுகுரல்
துயர இருளொடும் தொடர்ந்தது படர்ந்தே.
தள்ளையின் நலத்தைத் தாங்கிப் புரக்கும்
பிள்ளையைப் பெற்றேன் பெருங்களிப் புற்றேன், 30
இன்றவன் எங்கோ எனவிட் டேகினன்
துன்றும் இடர்தனத் துடைப்பவர் எவரோ ?
வாழ்வெனும் ஏட்டில் வரவு வைத்தேன்
குந்துயர் படரச் செலவே தொடர்ந்தது ;
புலவரும் அரசரும் புரவலர் பலரும் 35
குலமணி யிவற்கு நலமணி விழாவெனப்
போற்றினர் அவன்புகழ் சாற்றினர் கேட்டுளத்
தேற்றிய மகிழ்வால் இறும்பூ துற்றேன் ;
விழாமணி மண்ணில் வீழ்ந்த தோவென'
அழாநின் றயர்ந்தனள் தமிழெனும் அன்னை; 40
கண்ணின் மணியைக் கையுறு கனியை
மண்ணிற் படுத்தவோ மகனெனப் பெற்றனள் ?
அரும்பெற்ற புதல்வனே ஆருயிர் மைந்தனைப்
பெருங்குலக் கொழுந்தைப் பிரித்திடின் பெற்றவள்
அடைதுயர் களைதல் அரிதினும் அரிதே 45
உடைந்த உளத்தனள் உறுதுயர் பெரிதே !