பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



25

தமிழில் பிறமொழிச் சொற்கலந்து எழுதும் சிலவச மிகவும் இடித்துக்கூறிப் பிறமொழி கற்றும் நல்ல தமிழ் நடையிலெழுதும் கதிரேசரின் திறமையை விதந்தோதுகிரு.ர். 'நன்மொழி இதனுள் நாணம் இலராய்ப் பன்மொழிச் சொற்கள் பரவிடக் கலந்து, புன்மைச் செயலாற் பொருந் தாது எழுதும்' பன்மொழிப் புலமைப் பயிற்சியரை அவர் நகையாடுகின்றார். எனவே 'பண்டிதமணியின் செம்மையும் செழுமையும் வாய்ந்த சொல்லும் செயலும் தமிழ்மக்கட்கு ஊன்றுகோலாய் உதவும். இழுக்கல் உடையுழி ஊன்றுகோல் போல, நாமும் அவர் கந்த ஊன்றுகோலைக் கொண்டு பயன்பட வாழ்வோமாக என்று இக் காப்பியம் நிறைவுறுகிறது. பண்டித மணியார் தந்த பயன் தரும் ஊன்றுகோலேக் கொண்டுளம் தளரா வண்ணம் கூடியே நடப்போம் வாரீர்' (17:17) என்று, நம் நெடிய பயணத்தை நமக்கு நினைவூட்டி அமைகிறது இக் காப்பியம், இவ்வாறு பாவிகம் என்பது. காப்பியப் பண்பே என்பதற்கொப்ப இந்நூல் முழுதும் இக் கருத்துப் பல்வேறு முறைகளிலும் துறைகளிலுமாக இழையோடுவது மேலும் ஆராய்ந்து மனங்கொள்ளுதற்குரியதாகும்.

காப்பியத் தொடக்கம் - 'உலகெலாம் உணர்ந்து' , 'உலகம் யாவையும்’ என் இவ்வாறு உலகை முன்வைத்து முறையே சேக்கிழாரும் கம்பரும் தொடங்கியதற்கு இணங்க, இவர் உலகெலாம் உய்ய எனத் தொடங்குகிருர். முதல் பாட்டு தமிழ்த் தெய்வ வணக்கமாக அமைகிறது.

“உலகெலாம் உய்ய வைக்கும்
   உயரிய கொள்கை யாவும்
நிலவிய தொகையும் பாட்டும்
    நிகழ்த்திய சங்கம் ஏறி
அலகிலாப் பெருமை பூண்டாள்
    அன்னையாம் தமிழணங்கின்
மலருலாம் அடிகள் வாழ்த்தி
    மகிழ்வுற மனத்துள் வைப்பாம்!"