பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்


விரிமனக் கொள்கை யெல்லாம்
விரித்திடுஞ் சங்கப் பாட்டுக்
குரியவன் கணியன் என்னும்
ஒருதனிப் புலவ னான
குரிசிலை உலகம் போற்றக்
கொடுத்தது தமிழ்ப்பூங் குன்றம்
சிறியதே எனினும் மிக்க
சிறப்பினாற் பெரிய தாகும் 3

இலக்கியப் பண்பா டின்னும்
இருக்கிற தென்று கூறித்
துலக்கிடச் செட்டி நாடே
துணையெனச் சொல்ல லாகும்
நலத்தகும் அந்தாட் டுள்ள
நமதுபூங் குன்றுக் கின்று
சொலப்படும் பெயரோ நல்லோர்
சூழ்மகி பாலன் பட்டி 4

பொருளினல் மிகுந்த மேலோர்
புலமையிற் சிறந்த நூலோர்
அருளினால் இரங்கும் நல்லோர்
;அன்புடன் பண்பும் உள்ளோர்
குறளினால் உரைத்த கொள்கை
குறிக்கொளும் இல்ல றத்தார்
மருளினால் திரியா மாந்தர்
மதியினார் வாழும் நல்லூர்