பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்



சிலவிதை துரவி விட்டுச்
செந்நெலாற் களஞ்சி யத்தைக்
குலவுற நிறைத்துக் காட்டுங்
குடியினர் வாழுஞ் சிற்றுார்
உலகினர் வியக்கும் பாடல்
இன்றினைக் கொடுத்து விட்டுப்
பல பல பாடல் கொண்டு
பல்கிடுஞ் சிறப்பிற் ருகும்
15

பெருமைசேர் பூங்குன் றத்துப்
பீடுயர் வணிகர் தம்முள்
கருணைவாழ் மனத்தர் தத்துக்
கருப்பனென் றொருபேர் தாங்கும்
திருவினர் துணைவி யான
சிவப்பியார் மணிவ யிற்றுள்
கருவிலே உருவ மான
கதிரவன் எழுந்தான் அம்மா!
16

பெற்றவர் உள்ளம் பொங்கப்
பிறந்தநல் வீடும் ஊரும்
பெற்ருெளி விளங்கப் பண்டை
இலக்கியம் பிறங்கித் தோன்றக்
கற்றவர் நெஞ்ச மெல்லாம்
கதிர்விடத் தமிழ வானில்
உற்றெழு கதிரைக் கண்டாள்
உவந்தனள் தமிழ்த்தாய் அங்கே

17