பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. கலைபயில் கதை

திண்ணையிற் பள்ளி வைத்தே
தெளிவுறக் கற்கக் கல்விப்
பண்ணேயென் றதனக் கொண்டே
பயின்றனர் அற்றைய நாளில்
எண்ணுடன் எழுத்தும் மண்ணில்
ஏட்டினில் எழுதி ஒதிக்
கண்ணென மதித்துப் போற்றிக்
கல்வியை ஒம்பிக் காத்தார் .
1

பலர்புகழ் கல்வி கற்கப்
பச்சிளஞ் சிறுவர் எல்லாம்
புலருமுன் விழித்துக் கொள்வார்
புள்ளெனப் பறந்து செல்வார்;
மலர்விரல் கொண்டு மண்ணில்
வடிவுற எழுதிக் காட்டி
அலர்சிறு வாயால் ஒதி
அவரவர் முறைவைப் பாரே

2