பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஊன்றுகோல்

௧௰

எழுத்தறி வித்த ஆசான்
இறைவனென் றெண்ணி வந்தார்
பழுத்தநல் லறிவும் அன்பும்
பண்புடன் கருணை நெஞ்சும்
வழுத்திடுந் தோற்ற முங்கொள்
வானவன் பயில வந்தோர்
தழைத்திடல் ஒன்றே கொண்டு
தண்ணளி சுரப்பன் நன்றே 3

முவிரண் டாண்டு செல்ல
முதன்முதல் தொடங்குங் கல்வி
நாவினில் ஒதி ஒதி
நலம்பெற விழைந்து பள்ளிக்
கோவிலுட் புகுந்த தந்தக்
குலக்கதி-ரேசப்-பிள்ளை
பூவினுள் மணிவண் டொன்று
புகுந்தது தேனே மாந்த 4

பழுதற எழுதக் கற்றுப்
படித்தனன் நெடுங்க ணக்கை
அழகிய ஆத்தி குடி
அறஞ்சொலும் உலக நீதி
விழைவுடன் ஒதி ஒதி
விரைவினிற் கற்றுத் தேர்ந்து
தொழுதகும் ஆசா னுக்குத்
தொடுத்தனன் புகழின் ஆாம் 5