பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௨

ஊன்றுகோல்

ஒருமையிற் கற்ற கல்வி
உதவிடும் எழுமை என்ற
மறைமொழி புகன்ற வாய்மை
மறைமொழி யாகா தன்றோ?
தெரிதரும் முன்னே நூல்கள்
தெளிவுறக் கற்கும் போது
பரிவுடன் பழைய பாடம்
படிப்பபோல் இருந்த தென்றார் 9

திண்ணையில் அமைந்த பள்ளி
திருத்திடும் ஆசாற் சார்ந்தங்
கெண்ணுடன் எழுத்துங் கற்கும்
இளையநற் பருவத் தாரைக்
கண்ணெனும் வணிக நோக்கில்;
கலத்தினிற் செலவி டுத்தல்
பண்ணுயர் செட்டி நாட்டுப்
பழங்குடி வழக்க மாகும் 10

வணிகர்தம் குலத்து வந்த
வழக்கிளுல் இலங்கை யென்னும்
அணிநகர்க் குய்த்து வைத்தார்
அக்கதி ரேசன் தந்தை;
பணியினை ஏற்ற பிள்ளை
பதினேராண் டகவை கொண்டான்;
துணிபகர் கடையில் அந்தத்
துய்யவன் பணிமேற் கொண்டான் 11