பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கலைபயில் காதை

௧௩

முத்தமிழ் அளக்க வல்ல
முழுமதி பெறுவான் அங்கே
அத்துணி அளந்து விற்றான்
அவன் நிலை யாரே கண்டார்!
புத்தகம் எழுதுங் கையால்
புதுத்துணி மடித்துத் தந்தான்
1பத்துடன் தொகையைச் சொல்வான்
பணத்தொகை விலையைச் சொன்னான் 12

தொகை எனும் நூல்சொல் வாயால்
துணித்தொகை பகர்ந்த போதும்
தகுதியின் மிக்க சான்றோர்
தம்முடன் பழகி வந்தான்
வகைபடு துணிக ளெல்லாம்
வாணிகம் செய்யும் போதும்
அகமொரு தனித்த போக்கை
அவாவியே சென்ற தங்கே 13

துணிகளைக் கைகள் பற்றும்
தூய்மையை நெஞ்சம் பற்றும்
2அணிகலை விழிகள் நோக்கும்
3அணிகளை உள்ளம் நோக்கும்
துணிநயம் விரல்கள் பார்க்கும்
சொல் நயம் சிந்தை பார்க்கும்
மணியவன் நினைவு முற்றும்
மற்றுமோர் உலகிற் செல்லும் 14

1.பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும். 2. அணியும் ஆடைme) 3.உவமை முதலான அணிகள்.