பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்

பள்ளியில் ஆத்தி சூடி
படித்ததை நினைந்து பார்த்தான்;
தெள்ளிய இன்பம் இந்தச்
சிற்றடி தருமேல் மற்றை
உள்ளுறை இலக்கி யங்கள்
ஊற்றெனச் சுரந்து நெஞ்சை
அள்ளுமே எனநி னைந்தான்
ஆய்ந்தனன் ஏடு தேடி 21

கிடைத்தது கம்ப நாடன்
கிளத்தியனெ யந்தான்
படித்தனன் எங்கோ முன்னர்ப்
படித்தது போன்று ணர்ந்தான்;
முடித்திடத் தடைக ளில்லை
மூழ்கினன் இலக்கி யத்துள்;
அடித்தளத் தூறி வந்த
அவாவினால் வளர்ந்து விட்டான்22

இனியநல் லார்வம் விஞ்ச
இனுஞ்சில தேடிப் பெற்றான்;
கனிவுடன் விளக்கிக் கூறிக்
கற்பிக்கும் ஆசா னின்றித்
தனிமையில் அனைத்துங் கற்றுத்
தக்கதோர் புலமை பெற்றான்
தனிமொழி தமிழே யன்றோ
தனித்திருந் ததனைக் கற்றான்23