இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கலைபயில் காதை
ககூ
தன்னுணர் வுந்தித் தள்ளத்
- தணிவிலா ஆர்வத் தாலே
தென்மொழி தேர்ந்த பின்னர்
- வடமொழி தெளிவான் வேண்டி
நன்னய மொழியில் வல்ல
- நல்லவர்த் தேடி நின்றார்:
பன்மொழி கற்றுத் தேறல்
- பைந்தமிழ்க் காக்கந் தானே30
சாத்திரங் கற்றுத் தேர்ந்த
- [1]நாரணன் என்று சாற்றும்
சாத்திரி ஒருவர்க் கண்டார்
- தம்முளக் கருத்தைச் சொன்னார்,
பாத்திரம் ஏற்ற தென்று
- பயிற்றிட அவரும் நேர்ந்தார்;
ஏத்திடும் வண்ணங் கற்றார்
- இருமொழி வல்ல ரானர்31
வடமொழிப் பயிற்சி முந்நூல்
- வகுப்பினர்க் குரிய தென்பார்
அடஇது வியப்பே யன்றோ?
- அப்படி மொழிதான் உண்டா?
இடமுடை ஞாலத் துள்ளார்
- எம்மொழி விழைவ ரேனும்
திடமுடன் முயல்வ ராகின்
தெள்ளிதின் உணர லாகும்32
- ↑ 1நாரணன்- தருவை நாராயண சாத்திரியார் இவரிடம் ஐந்தாண்டுகள் கதிரேசர் வடமொழி பயின்றார்.