பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14. மயில்

பச்சை மயிலே! இங்கேவா;
பாலும் சோறும் வேண்டாவா ?
இச்சை யுடனே நான்தருவேன்;
இன்பாய் என்னுடன் ஆடிடவா.

அழகாய் உன்னைப் போலவே
அசைந்து நானும் ஆடவே
பழக வேண்டும் பொன்மயிலே!
பார்க்கச் சற்றே ஆடிவா.

இத்தனை கண்கள் தோகையிலே
எழுதித் தந்தவர் யார் மயிலே?
அத்தனை கண்கள் எனக்கில்லையே!
அமைத்தவர் யாரெனத் தெரியலேயே!

14