பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/36

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30. எங்கள் நாடு

நீர்வளமும் நிலவளமும் நிலவியநன் னாடு ;
ஏர்வளத்தின் பேர்வளத்தால் ஏற்றமுள்ள நாடு.

பொற்குவையால் நெற்குவையால் புகழடைந்த நாடு ;
சிற்பமுடன் ஓவியங்கள் சிறந்திருக்கும் நாடு.

வாழைபலா மாமரங்கள் வளமிகுந்த நாடு ;
தாழைபனை தென்னைஇவை தழைத்துயர்ந்த நாடு.

ஆவினத்தின் அருமையறிந் தாதரிக்கும் நாடு ;
கோவில்களும் கோபுரமும் கொண்டொளிரும் நாடு.