பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/38

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

31. ஏழைக்குச் சோறிட வேண்டும்

ஏழைக்குச் சோறிட வேண்டும்-அவன்
ஏழைமை நீங்க உதவிடல் வேண்டும்
கோழைத் தனம்கெடல் வேண்டும்-பிறர்
குற்றங்கள் செய்திடில் மன்னிக்க வேண்டும்.

உண்மை உரைத்திட வேண்டும்-என்றும்
உத்தம ராகவே வாழ்ந்திட வேண்டும்
எண்ணித் துணிந்திட வேண்டும்-அந்த
எண்ணங்கள் ஈடேற உழைத்திட வேண்டும்.

சொன்னசொல் காத்திட வேண்டும்-வரும்
சோம்பலை முற்றிலும் போக்குதல் வேண்டும்
பொன்னும் தொகுத்திடல் வேண்டும்-பலர்
போற்றும் வகையினில் வாழ்ந்திடல் வேண்டும்

36