பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/41

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பருத்தி

வேளைக் கொருவிதம் உடையுடுத்து-மக்கள்
      வீதியில் செல்வதும் என்னாலே ;
நாளும் நிகழும் நிகழ்ச்சிசொலும்-அந்த
      நல்ல புதினமும் என்னாலே.
      
பாலர் படிப்பதும் என்னாலே-உயர்
      சீலம் உணர்வதும் என்னாலே ;
வேலை உயர்வதும் என்னாலே-பொருள்
      வேண்டிப் பெறுவதும் என்னாலே.
      
நாடு சிறப்பதும் என்னாலே-நல்ல
      நாகரி கங்களும் என்னாலேே ;
ஆடலும் பாடலும் என்னாலே -என்னை
      ஆதரிப் பீர்உயர் பொன்போலே.