பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திகழும் அவர்களுள்
      திலகம் போன்றவன்
   திருமா வளமன்னன்;
புகழும் அறிவும்
      ஆற்றலும் வாய்ந்தவன்
   பொன்னேர் குணமன்னன்.

சின்னஞ் சிறியவன்
      என்னும் வயதினில்
   திருமா வளமன்னன்
அன்னோ! இழந்தான்
      பெற்றோர் அவர்தமை
   அறியாப் பருவமதில்.
   
ஆளும் உரிமையை
      அன்புடன் ஏற்றனன்
   திருமா வளஅரசன்
கேளும் கேளும்
      பங்கா ளிகள்புரி
   கெடுதியை என்சொல்வேன்!

ஏழாம் வயதில்
      சிம்மா சனமதில்
   ஏறினன் இளவரசன்
ஊழால் பகைவர்கள்
      சிறையினில் அவன்தனை
   உடனே அடைத்தனரே.

செய்தி அறிந்தனர் ;
      சினமது கொண்டனர்
   சோழப் பொதுமக்கள்.
உய்ந்திவர் போவதும்
      உண்டோ எனவே
   உறுமினர் பொதுமக்கள்.