பக்கம்:எங்கே போகிறோம்.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தவத்திரு அடிகளார் அவர்களின்
சிந்தனைத் துளிகள்

முயற்சி - எந்த ஒரு செயலையும் நோன்பு போல் பிடிவாதமாக ஏற்றுக்கொண்டு செய்யும் மனப்போக்கு இருந்தால்தான் கடமைகளைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.

ஆன்மிகம் - சித்துக்களை காட்டி ஆன்மிகத்தை வளர்ப்பது செயற்கையாக மூச்சுவிடுதலைப் போலத் தான்.

விஞ்ஞானம் - ஞானம் கண்ட உண்மைகளை அனுபவத்திற்குக் கொண்டு வரும் பணியை விஞ்ஞானம் செய்கிறது.

உழைப்பு - ஆற்றலைத் தருவது ஆர்வம்; ஆர்வத்தைத் தருவது வாழ்க்கையின் மீது ஏற்படும் ஆசை. ஆசைகள் ஆர்வங்களாக மாறவேண்டும். ஆர்வங்கள் அயரா உழைப்புக்களாக மாறவேண்டும் இதுவே வாழ்வு.

அறியாமை - தனக்குரியதை விட்டுக்கொடுக்காமல், மற்றவர்களிடம் தியாகத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

காலம் - காரியங்கள் நடந்தால் மட்டும் போதாது. உரிய காலத்தில் நடக்கவேண்டும்.