பக்கம்:எங்கே போகிறோம்.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளாரின் சிந்தனைத் துளிகள் 183

அமைதி - அமைதி என்றால் சண்டையற்ற தன்மை என்று மட்டும் கருதக்கூடாது. நல்லெண்ணத்தின் அடையாளம் உடன்பட்ட கொள்கைகள் இணக்கமும், ஒத்துழைப்புத் தன்மையும் வாய்ந்த செயற்பாடுகள் பொருந்தினாலேயே அமைதியாகும்.

மனம் - மனத்திற்கு நல்ல பற்றுக்கோடு தராவிட்டால் அது சைத்தானைப் பற்றுக்கோடாக எடுத்துக் கொள்ளும். ‘வாழ்தல் வேறு; பிழைத்தல் வேறு.’

சடங்கு - சடங்குகளினால் விளையும் பயன்கள் யாதொன்றும் இல்லை. ஆனால், உணர்வைத் தூண்ட சடங்குகள் துணை செய்யும்.

காலம் - ஒரு நொடிப்பொழுது வாழ்க்கை நின்றாலும் பல நாள்களின் முன்னேற்றம் தடைப்படும்.

பொதுநலம் - நடைமுறைச் சில்லறைச் செலவுகளில் கவனம், மூலதனத்தைக் காப்பாற்ற உதவும்.

பொருளாதாரம் - அவரவர் நலனில் உள்ள அக்கறை அளவுக்கு அவரவர் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும். பொதுநலனில் அக்கறை ஏற்பட்டுவிட்டால் உலகு செழிக்கும்.

ஏழைகள் - ஏழைகளுக்கு துன்பம் பழகிப் போனதால் முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்பட மறுக்கிறார்கள்.

கலை - மக்கள், இலக்கியம், கலை, இசை இவற்றை அனுபவிக்கக் கற்றுக்கொண்டால் நல்லவர்கள் ஆகிவிடுவார்கள்.