பக்கம்:எங்கே போகிறோம்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொருளாதாரச் சிந்தனைகள் O 75

உழைக்கும் நேரத்தில் திரைப்பட அரங்குகளில் இருந்தால், தொலைக்காட்சிப் பெட்டியின் முன் உட்கார்ந்து இருந்தால் எப்படிப் பொருளாதாரம் வளரும்? நாட்டின் நிலையிலும் சரி-தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி-சேமிப்பு பெருகி வளர்ந்து அந்தச் சேமிப்புகள் முதலீடு ஆகும் வகையில் சமூகமும், அரசும் இயங்க வேண்டும்.

சேமித்து முதல் தருபவர்களுக்கு அரசு சலுகைகள்கூட வழங்கலாம். ஆனால் நமது நாட்டில் சேமிப்பு முதலாக மாறுவதில்லை. ஒன்று பணமாக இருக்கும். அல்லது அணிகலன்களாக இருக்கும். திட்ட முதலீட்டுச் செலவு கூடி வருதல் வேண்டும். திட்ட முதலீட்டுச் செலவு கூடினால்தான் பொருளாதாரம் வளரும். புதிய பொருளாதாரக் கொள்கை வளரும்.

விலை ஏற்றம் கட்டுப்படுத்தப்படவில்லை. மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. வேலை வாய்ப்புக்களும் அதிகரிக்கவில்லை. ஆயினும், வர்த்தகத் துறையிலும், தொழில் துறையிலும் சில விளைவுகள் ஏற்பட்டுள்ளது உண்மை. ஏற்றுமதியில் சற்றேறப் குறைய 21 சதவிகிதம் வளர்ந்திருக்கிறது. அன்னியச் செலவாணி கையிருப்புக் கூடி இருகிறது.

இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதெனினும், பயன் அடைந்தவர்கள் தொழிலதிபர்கள், சாதாரணப் பொது மக்கள் அல்ல என்ற உண்மையை உணர வேண்டும்.

ஆனால் நமது நாட்டில் பொருளாதார முயற்சிகளே நடைபெறவில்லை என்று கூறமுடியாது, நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்குரிய பணிகள் பரந்த அளவில் நடைபெறுவது உண்மை. இம் மாபெரும் புரட்சியானது ஏமாற்றத்தைத் தரக்கூடிய தாமதங்கள், தடங்கல்களால் பாதிக்கப்பட அனுமதித்துவிடக் கூடாது.