பக்கம்:என் சுயசரிதை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

விர்த்தாந்தங்களை இங்கு எழுத விரும்புகிறேன்.. நான் காலேஜில் படித்தபோது காங்கிரஸ் கூட்டம் சென்னையில் கூடிய போது ஒரு வாலண்டியராக இருந்தேன். இது நேர்ந்தது 1894-ஆம் வருஷம். அதற்குமுன் சென்னையில் காங்கிரஸ் கூடிய போது அதன் வேடிக்கையைப் பார்க்க என் தகப்பனார் என்னை அழைத்துக்கொண்டுபோனது ஞாபகமிருக்கிறது. 1894--ஆம் ஆண்டிற்குப்பின் ஒருமுறை சென்னையில் காங்கிரஸ் மகாசபை கூடியபோது நான் ஒரு வரவேற்பு அங்கத்தினனாக இருந்தேன். இவ்வளவதான் இதில் நான் சம்பந்தப்பட்டது.

இனி ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி எழுதுகிறேன். காலஞ் சென்ற சர். பிட்டி தியாகராஜ செட்டியார் இக்கட்சியை ஆரம்பிக்கு முன், எங்கள் குடும்பத்து சம்பந்தியாகிய திவான்பகதூர் ப. ராஜரத்தின முதலியார் ஒருநாள் சாயங்காலம் என்னைக் கூப்பிட்டனுப்பினார். நான் அவர் வீட்டிற்குப் போனபோது அவரும் காலஞ்சென்ற எல். டி. ஸ்வாமிக்கண்ணு அவர்களும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் காங்கிரஸ்கட்சி பிராம்மணர்களுடைய அபிவிருத்தியையே கவனித்து வருகிறது. நாம் எல்லோரும் பிராம்மணர்கள் அல்லாதாரை உயர்த்தும் பொருட்டு ஒரு கட்சியை ஏற்படுத்தவேண்டும். அதில் நீ ஒரு முக்கிய பங்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டனர். அதற்கு நான் “இவ்விஷயங்களிலெல்லாம் நான் தலையிட்டுக் கொள்ள எனக்கு இஷ்டமில்லை. என் வக்கீல் வேலையும் சுகுணவிலாச சபையுடைய வேலையுமே எனக்குப் போதுமானதாய் இருக்கிறது. மற்ற விஷயங்களில் புகுவதற்கு எனக்கு விருப்பமில்லை. அவகாசமுமில்லை” என்று மறுத்தேன். பிறகு ஜஸ்டிஸ் கட்சியை பிட்டி தியாகராஜ செட்டியார் ஸ்தாபித்த போது அதில் சேரும்படியாக என்னை பன்முறை கேட்டிருக்கின்றனர். அன்றியும் அக்கட்சியில் முக்கியஸ்தராயிருந்த பானகல் ராஜாவும் அதில் சேரும்படி கேட்டனர். இந்த பானகல் ராஜா அவர்கள் என்னுடன் 4 வருடம் பிரசிடென்சி காலேஜில் படித்த என் அத்யந்த சிநேகிதர் என்று நான் முன்பே கூறியுள்ளேன். இவர்களிருவருக்கும் நான் அக்கட்சியைச் சேராததற்கு கூறிய நியாயத்தை இங்கு சுருக்கமாக எழுதுகிறேன், “நம்முடைய தேசம் முன்னேறவேண்டுமென் றால் இக்கட்சிகளெல்லாம் ஒழிந்து ஐக்கியப்பட்டாலொழிய, இக்கட்சிகள் எல்லாம் இருக்கும் வரையில் நம்முடைய நாடு அடிமை நாடாகத்தான் இருக்கும். ஆகவே நான் எந்தக் கட்சியிலும் சேரப் பிரியப்படவில்லை. அன்றியும் என் வாழ்நாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/47&oldid=1123274" இலிருந்து மீள்விக்கப்பட்டது