பக்கம்:என் சுயசரிதை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யாய்ப் பேசு. (5) உனக்கு யாராவது கெடுதி செய்தால் அதைப் பொறுத்துக்கொள். அவர்களுக்கு நீ நன்மை செய்யும்படி முயல். (5) கோபத்திற்த இடமே கொடாதே. கோபம்வந்தால் முற்றிலும் அடக்கிவிடு. (7) எந்நேரமும் நகை முகத்துடன் இரு. (8) செல்வம் வந்தால் செருக்கடையாதே. ஏழ்மை வந்தால் தளர்ச்சியடையாதே. (9) மனதினால் ஒருவருக்கும் நீங்கு நினையாதே. வாக்கினால் தீமை பேசாதே. செய்கையால் தீங்கு இழைக்காதே. (10) பேராசைப்படாதே கிடைத்தது போதும் என்று சந்தோஷத்துடன் இரு. (11) வரும்படிக்குமேல் செலவு செய்யாதே. உன்னால் இயன்ற அளவு தர்மம் செய் ஆடம்பரத்திற்காக ஒன்றும் செய்யாதே. (12) இன்றைக்கு செய்ய வேண்டிய ஒரு வேலையை இன்றைக்கே செய்து முடி. நாளைக்கென்று தள்ளிப்போடாதே. (13) புண்ணியம் செய் பாபம் செய்யாதே. (14) உன் காலம் வந்தபோது பயமின்றி உன்னைப் படைத்தவர்கள் பாதம் போய்சேர்.

முடிவில் என் ஆயுளைப் பற்றி நான் யோசித்து பார்க்குமிடத்து பல இடையூறுகளும் கஷ்டங்களும் இருந்த போதிலும் சந்தோஷகரமான விஷயங்களே மேலிட்டிருக்கின்றன என்பது என் தீர்மான அபிப்பராயம். இன்னும் என் இவ்வுலக வாழ்க்கை எத்தனை காலம் இருக்குமோ என்பதை சொல்ல என்னால் முடியாது. ஆயினும் தமிழுக்காகவும் முக்கியமாக தமிழ் நாடகத்திற்காகவும் உழைக்க எனக்கு ஈக்தியிருக்குமளவும் உயிருடன் இருக்க விரும்புகிறேன். அச் சக்தி குன்றிவிட்டால் என் தாய் தந்தையர்கள் பாதத்திடம் போய் சேரவிரும்புகிறேன். இச்சிறு நூலை முடிக்குமுன் எனது 81-ஆம் பிறந்த நாளில் சென்னையிலுள்ள நடிகர்களும் சீமான்களும் பெரிய மரியாதை செய்த போது நான் அவர்களுக்கு வந்தனம் வழங்கிய போது கூறிய வார்த்தைகளை எழுதுகிறேன். “நான் இன்னொரு பிறப்பை விரும்பவில்லை. ஈசன் திருவுளம் நான் மறுபடியும் இப்புவியில் பிறக்க வேண்டுமென்று இருந்தால் அவரை மூன்று வரங்கள் கேட்பேன். (1) அப்பிறப்பில் இப்பிறப்பில் எனக்கு தாய் தந்தைகளாய் இருந்தவர்களே அப்பிறப்பிலும் தாய் தந்தையர்களாய் இருக்கவேண்டும். 2) இப்பிறப்பில் என் நண்பர்களாய் இருந்தவர்களே எனக்கு நண்பர்களாய் இருக்க வேண்டும். (3) அப்பிறப்பிலும் நான் ஒரு தமிழ் நாடக ஆசிரியனாகவும் விநோதத்திற்காக தமிழ் நாடகங்களை நடிக்கும் நடிகனாகவும் இருக்க வேண்டும்.”

முற்றிற்று
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/77&oldid=1113281" இலிருந்து மீள்விக்கப்பட்டது