பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

121



ராணி தேனீக்கள்
சாமானியத் தேனீ
டாமர் தேனீ


கலைஞருடன், முதல் தடவையாகத் தனிமையில் நேருக்கு நேராக, மனம் விட்டு உரையாடும் சந்தர்ப்பம் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் எனக்கு கிடைத்தது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல், முன்பு ஒரு தடவை, அவர் முதல்வராக இருந்த போது தனித்துப் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் முதல்வர். நான் தொலைக்காட்சிச் செய்தியாசிரியர். அந்தச் சந்திப்பு, எனது புலம்பலாகவும் அவர் வெறுமனே தலையாட்டுவதாகவும் மட்டுமே இருந்தது. ஆனால், இந்தச் சந்திப்போ என் அளவில் மறக்க முடியாதது. தோழமையுடன் கூடியது. எங்கள் உறவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

கலைஞரின் முன் அனுமதி பெற்று, எனது மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக, கோபாலபுரத்திற்குச் சென்றேன். அவருக்கு வேண்டிய கட்சித் தலைவர்கள், அங்கும் இங்குமாய் நின்றார்கள். ஆனால் கூட்டம் இல்லை. கலைஞரை மாடியில் சென்று சந்தித்தேன். கலைஞர் ஒரு பற்றற்ற யோகி போலவே தோற்றம் காட்டினார். அரசியல் விரோதிகள், தம்மை இழித்துப் பழித்துப் பேசியதோ, எவரை முன்னிருத்தினாரோ, அவராலேயே, தாம் அரசியலில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதையோ தெரியப்படுத்தும் எந்த வெளிப்பாடுகளும் முகத்தில் இல்லை. நடக்கிறபடி நடக்கட்டும் என்கிற தோரணை. நல்லதே நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு. அப்படியே அது பொய்த்துப் போனாலும் வெற்றியும், தோல்வியும் வீரருக்குச் சமம் என்ற தமிழ் மொழியைப் பிடித்துக் கொண்ட தத்துவார்த்த பார்வை. அந்த அறையில் தவ யோகி போலவே தென்பட்டார்.