பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

165



வள்ளலாரியத்தில் ஒன்றிப் போன பழ.சண்முகனார், ஊரன் அடிகள், பேராசிரியர் மெய்யப்பன், தமிழ் வேள்வி சத்தியவேல் முருகன் போன்ற ஆன்மிக வித்தகர்களும், முனைவர் இரா. இளவரசு, கவிஞர் ஈரோடு தமிழன்பன், ச. செந்தில்நாதன், முகம். மாமணி, கி.த. பச்சையப்பன் போன்ற நாத்திகர்களும், நயம்பட கலந்து கொண்டார்கள். சென்னை தொலைகாட்சியின் முன்னாள் இயக்குநர் ஏநடராசன் அவர்களும், கவிஞர் சிற்பி அவர்களும் பங்கேற்றார்கள். குங்கிலி யம் பழசண்முகனார் வள்ளலார்மயமாக ஆனவர். அந்தப் பெரியவர் சாதிய மறுப்பாக அமைக்கப்பட்டு வரும் சமத்துவபுரத்தை சுட்டிக்காட்டி, கலைஞருக்கு சமத்துவபுர தோன்றல் என்று, பலத்த ஆரவாரத்திற்கிடையே பட்டமளித்தார்.

நான், எனது தலைமை உரையில் வானளாவிய அதிகாரம் - கொண்ட முன்னாள் பேரவைத் தலைவர் ஒருவர் போல நடந்து கொண்டதற்காக இப்போது வருந்துகிறேன். பேசுகிற ஒவ்வொருவரையும், காலங்கருதி முடிக்கும்படி தெரிவித்தேன். இப்போதைய தொலைக்காட்சிப் பாணியில் குறைந்த நேரத்தில் பேசி முடிக்கிறவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டேன். கலைஞர் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவரது நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காகவும்தான் அப்படிக் குறிப்பிட்டேன். ஆனாலும் கலைஞர் என்னைப் பார்த்து ‘ஏன் அவசரப்படுத்துறிங்க’ என்று மென்மையாக கடிந்து கொண்டார்.

அனைத்து பேச்சாளர்களும் பேசி முடித்த பிறகு, நான் எனது முடிவுரையில் வள்ளலாரை தமிழர் நலன் கருதி மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை விளக்கினேன். ஏதலைவன் தன்னை விட வீரனாகிவிடுவான் என்று பொறாமைப்பட்ட அர்ச்சுனனின் தூண்டுதலால் அந்த மலைச்சிறுவனின் கட்டை விரலை வெட்டி கொடுமையை எடுத்துரைத்தேன். இந்த நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு அர்ச்சுனா விருதுகளும், நல்லாசிரியர்களுக்கு துரோணாச்சாரியார் விருதுகளும் கொடுக்கப்படுவது அசல் மோசடி என்றேன். ஏகலைவனான வள்ளலாரை, கட்டை விரலை வெட்டக் குடுக்காத இன்னொரு ஏகலைவனான கலைஞர்தான் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

கலைஞர் பேச எழுந்தார். ‘சமுத்திரத்தைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும்’ என்று எடுத்த எடுப்பிலேயே பீடிகை