பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

என் பார்வையில் கலைஞர்


கலைஞர்-மூப்பனார்
ஒரு
தமிழர் இலக்கணம்


இரண்டாயிரம் ஆண்டில் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் கலைஞரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

எனது மகன் சிவகுமாரின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக வழக்கம் போல் சண்முகநாதன் மூலமாக கலைஞரைச் சந்தித்தேன். கோவையில் நடைபெறும் திருமணத்திற்கு கலைஞரால் வரமுடியாது என்றாலும், சென்னையில் நடைபெறும் வரவேற்பிற்கு, அவர் வந்தாக வேண்டும் என்றேன். ‘சார் என் மகளோட கல்யாணத்துக்கு நீங்க வரல. ஆனா இந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்’ என்றேன் உரிமையோடு . உடனே ‘கலைஞர் உங்க மகளோட திருமண நாளுல எனக்கு இன்னொரு திருமண நிகழ்ச்சி இருந்தததை அப்பவே உங்ககிட்ட சொன்னேனே’ என்று பதிலளித்தார்.

நான் அசந்து போனேன். கலைஞர் அப்போது அப்படி சொன்னது அந்தச் சமயத்தில்தான் எனக்கும் நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்கு பிறகும் கலைஞர் அப்போது பேசியதை மறக்காமல் வைத்திருக்கிறார். பல்வறு அரசியல் சமூக நிகழ்வுகளை கூட முழுமையாக நினைவு படுத்த முடியாமல் பல தலைவர்கள் அல்லாடி இருப்பதை செய்தியாளன் என்ற முறையில் நான் பலதடவை பார்த்திருக்கிறேன். ஆனால், கலைஞரோ ஒரு சாதாரண விஷயத்தைக் கூட அதுவும் ஐந்தாண்டுக்கு முன்பு பேசியதை மனதில் பதிவு செய்திருப்பது கண்டு நான் பூரித்துப் போனேன் என்று மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்ல ஒரு மாதிரி இருக்கிறது. ஆனால், உண்மை அதுதான்.